அந்த பெட்ரோப் அப்பொழுது ரஷ்ய ராடார் முன் அமர்ந்திருந்தார், அது 1983ம் வருடம், செப்டம்பர் 26 திடீரென அவரின் ரேடார் அமெரிக்க ஏவுகனைகள் மொத்தமாக ரஷ்யாவினை நோக்கி வருவதாக காட்டிற்று, அவர் இருந்தது மிக பொறுப்பான பதவி அதாவது அவர் சொல்வது எல்லாமே உறுதிபடுத்தபட்ட தகவலாக இருக்கும் என்பதால் அவர் சொல்லிவிட்டால் ரஷ்யா தன் பதில் நடவடிக்கையினை தொடங்கும். வருவது என்ன ரக ஏவுகனை, அணு ஏவுகனையா? சோதனையா? என அவருக்கு தெரியவில்லை, ஆனால் அவர் சொல்லவேண்டும், சொல்வது சிக்கல் இல்லை , சொன்ன மறுநொடி ரஷ்யா அமெரிக்காவினை சின்னாபின்ன படுத்தும் இவருக்கோ என்ன செய்வதென தெரியவில்லை, காரணம் அது மிரட்டல்கள் இல்லா இயல்பான காலம். போர் எல்லாம் வர வாய்ப்போ பிரச்சினையோ இல்லை, இப்பொழுது எப்படி? ஆனால் சொல்லாமல் இருந்து, வருவது ஏவுகனைகளாக இருந்தால் ரஷ்யா அழியும், பின் இவர் அந்த பொறுப்பில் இருந்து என்ன பயன்? இப்படியாக இரு விஷயங்களை மாறி மாறி யோசித்தாலும் அவர் உள்மனம் சொன்னபடி நடப்பது நடக்கட்டும் என இருந்துவிட்டார், 20 நிமிடங்களில் முடிவு தெரியும் எப்படி இருந்திருக்கும் அவருக்கு? ஆனால் உணர்ச்சிகளை வெளிகாட்டாமல் அமர்ந்திருந்தார். த...
Comments
Post a Comment