இனி மாதா கோவிலில் மெழுகுவர்த்தி பிடிப்பவனும் தியாகி ஆகலாம்...

அந்த திருமுருகன் காந்தி என்ன நாட்டிற்காக பல ஆண்டு சிறையில் இருந்துவிட்டா வருகின்றான்?


ஏதோ சீனாவுடன் யுத்தம் புரிந்து அதில் அகபட்ட கைதி 14 வருடம் சிறையிருந்து வருவது போலவும், பெரும் தேசபக்தன் ஒருவன் சிறைமீள்வது போலவும் ஏகபட்ட பில்டப்புகள்,


என்ன கிழித்துவிட்டான் என்று இவருக்கு இவ்வளவு பில்டப்? சிறை சென்றுவிட்டாராம்.




ஆட்டோ சங்கர் கூட சிறையில்தான் இருந்தான், வீரப்பன் கூட்டாளிகள் இன்னும் சிறையில் இருக்கின்றனர்.


தேசத்திற்கு எதிரான வழக்கில் உள்ளே சென்றுவிட்டு வருபவருக்கு ஏன் ஆர்பாட்டம்?


மே 17ல் முள்ளிவாய்க்காலில் செத்தார்கள் என கடலுக்கு மெழுகுவர்த்தி பிடித்ததை விட அவர் இத்தேசத்திற்கு செய்தது என்ன?


அதுவும் செத்தது அடுத்தநாட்டுக்காரர்கள்


மே17க்கு முன்பு இந்தியா அந்த ஈழவிவகாரத்தில் எவ்வளவு இழந்தது என்பது பற்றியெல்லாம் திருமுருகன் பேசினாரா என்றால் இல்லை.


மாறாக சும்மா மே 17 , பங்குனி 17 என ஒப்பாரி வைத்துகொண்டே இருப்பது.


பிரபாகரனோடு பழகிய ப.சிதம்பரம் முதல் பண்ருட்டி ராமசந்திரன் வரை எத்தனையோ பேர் தமிழகத்தில் உண்டு. அவர்கள் எல்லாம் சும்மா இருக்க, இவர் குதிப்பாரம்.


அதுவும் மெரினாவில் மே 17 என ஓலமிடுவது அதற்கு சற்று தள்ளி இருக்கும் ராஜிவ் நினைவிடத்தை அப்படியே மறந்துவிடுவது. இதன் பெயர்தான் நினைவேந்தல், இதனை செய்யும் திருமுருகன் ஒரு போராளி.


முதலில் இலங்கையில் புலிகளால் கொல்லபட்ட 1500 இந்திய வீர்களுக்கு மெரீனாவில் ஒரு நினைவு தூண் கட்டபடவேண்டும்


அதன் பின் எவன் மே 17 என மெழுகு பிடிக்கின்றான் என பார்க்கலாம்


மெழுகுவர்த்தி பிடித்தவன் எல்லாம் தமிழின தியாகி எனும் அளவிற்கு தமிழ்நாடு சென்றுகொண்டிருக்கின்றது.


இனி மாதா கோவிலில் மெழுகுவர்த்தி பிடிப்பவனும் தியாகி ஆகலாம்...



Comments

Popular posts from this blog

அந்த கிழவனுக்கு 139 வயதாயிற்று

பெட்ரோப்பிற்கு உலகம் அஞ்சலி செலுத்தி செலுத்திக்கொண்டிருக்கிறது

குஷ்புவே நமஹ ! : 10