பன்னீர் செல்வம் என்பவர் சுத்த மோசம்...




Image may contain: 1 person, smilingஇந்த பன்னீர் செல்வம் என்பவர் சுத்த மோசம். வழக்கம் போல தர்மயுத்தம் தொடர்பாக ஏதோ பேசியிருப்பார் என அவர் செய்தியினை படித்துவிட்டு மகா சிக்கலில் இருக்கின்றேன்.


அவர் சொன்னதை கேட்டு கத்தி, ஓஓ என சிரித்து அதுவும் தாளாமல், உருண்டு புரண்டு சிரித்ததில் இருக்கையும் மேஜையும் அல்லோல பட்டுவிட்டது. எல்லாம் அடுக்கி வைத்துகொண்டிருக்கின்றேன்


எல்லோரும் ஒரு மாதிரி பார்த்துவிட்டார்கள், இனி எப்படியெல்லாம் விசாரணை வருமோ தெரியாது.





ஒரு சிலர் இன்றே தர்காவிற்கு அழைத்து செல்வது போல பரிதாபமாக பார்கின்றார்கள். இது சீனர்களுக்கு பேய் மாதமாம், அவர்கள் வேறு பயந்துவிட்டார்கள்.

மனிதர் இப்படியா பெரும் சிக்கலை ஒருவனுக்கு உருவாக்குவார்?, சத்தியமாக ஜெயலலிதா ஆன்மா இவரை சும்மா விட கூடாது

அப்படி என்ன சொல்லி விட்டார்?, அலுவலகத்தில் அல்லது முக்கியமான கூட்டத்தில் , துக்க வீட்டில் இருப்பவர்கள் தொடர்ந்து படிக்க வேண்டாம்

அவர் சொன்னது இதுதான்

...
...
..

"என்னை போல நல்ல அரசியல்வாதிகளை உருவாக்கும் பெரும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு இருக்கின்றது"













 














Comments

Popular posts from this blog

அந்த கிழவனுக்கு 139 வயதாயிற்று

பெட்ரோப்பிற்கு உலகம் அஞ்சலி செலுத்தி செலுத்திக்கொண்டிருக்கிறது

குஷ்புவே நமஹ ! : 10