இலங்கை கடற்படை தளபதியாக தமிழர் சின்னையா




இலங்கை கடற்படை தளபதியாக தமிழர் சின்னையாவினை வைத்தாலும் வைத்தார்கள் , இலங்கையில் அவரை கொண்டாடுகின்றார்கள்


அவர் யார் தெரியுமா? இந்தோனேஷியா பக்கம் நின்றிருந்த புலிகள் கப்பலை அழித்த மாவீரன், திருகோணமலை பக்கம் நின்று புலிகளை ஒழித்த சூரன் என்றெல்லாம் கடும் கொண்டாட்டம்


ஆக புலிகளை ஒழித்ததில் ஒரு தமிழன் பெரும் பங்களிப்பினை செய்திருக்கின்றான்


இனிதான் இருக்கின்றது அடுத்த சிக்கல், எல்லை தாண்டும் தமிழக மீணவர்களை பிடிப்பதெல்லாம் இலங்கை கடற்படைதான். அதன் தலைவர் இனி தமிழர்


இனி இங்கிருது கொண்டு சிங்களன் அடிக்கின்றான், பிடிக்கின்றான் என சொல்ல முடியாது. தமிழன் தான் தமிழன் படகினை பிடிக்க போகின்றான்


அப்பொழுது இங்கிருக்கும் சைமன் கோஷ்டி எப்படி கொதிக்கும்?


"ஏ சிங்கள அரசே.. தமிழனுக்கு உயர் பதவி கொடுக்காதே, அவனுக்கு அரசு வேலையே கொடுக்காதே


இம்மாதிரி பதவியில் தமிழனை வைத்தால் நாங்கள் எப்படி திட்டுவது?


எல்லா அரசு வேலைகளிலும், உயர் பதவிகளிலும் சிங்களனையே வை, தமிழனை விரட்டு. அப்பொழுதுதான் எங்களுக்கு வசதி"




 

 



 

Comments

Popular posts from this blog

அந்த கிழவனுக்கு 139 வயதாயிற்று

பெட்ரோப்பிற்கு உலகம் அஞ்சலி செலுத்தி செலுத்திக்கொண்டிருக்கிறது

குஷ்புவே நமஹ ! : 10