சசிகலாவுக்கு ஈபிஎஸ் நன்றியுடன் இருக்க வேண்டும்: சுப்பிரமணிய சுவாமி




Image may contain: 1 person, close-upசசிகலாவுக்கு ஈபிஎஸ் நன்றியுடன் இருக்க வேண்டும்: சுப்பிரமணியன் .


சசிகலாவினை ஜெயலலிதாவிற்கு அறிமுகபடுத்திய சந்திரலேகாவிற்கு, ஜெயாவோடு அவர் தங்கி இருந்து உதவ வாய்ப்பளித்த சந்திரலேகாவிற்கு சசிகலா நன்றியோடு இருந்தாரா சுவாமி?


அவர் முகத்திலே ஆசிட் அடித்தது என்ன நன்றி கடனா?




இதனை போல எத்தனைபேருக்கு நன்றிகடன் காட்டியவர் சசிகலா என்பது உங்களுக்கு தெரியாததா?


அந்த சசிகலா கும்பலுக்கு நன்றி இருக்க கூடாது, ஆனால் அவரோடு இருந்தவர்களுக்கு மட்டும் நன்றி இருக்க வேண்டுமா?


மிஸ்டர் சுவாமி, சரி பழனிச்சாமிக்கு சசி உதவினார் அவர் நன்றியோடு இருக்கட்டும் என்கின்றீர்கள்? ஆனால் உங்களையும், சந்திரலேகாவினையும் தொலைக்க தேடிய அந்த சசிகலாவிற்கு நீங்கள் இப்பொழுது நன்றியாய் இருக்கும் மர்மம் என்ன?


நிச்சயமாக பகைவனுக்கு அருளும் நன்னெஞ்சு உள்ளவரே அல்ல நீர் என்பதால் கேட்கின்றோம்


சசிகலாவிற்கு நீங்கள் திடீர் விசுவாசம் காட்டும் மர்மம் என்ன சுவாமி?



















Comments

Popular posts from this blog

அந்த கிழவனுக்கு 139 வயதாயிற்று

பெட்ரோப்பிற்கு உலகம் அஞ்சலி செலுத்தி செலுத்திக்கொண்டிருக்கிறது

குஷ்புவே நமஹ ! : 10